‘இந்திய அணியில்’…ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா? உறுதியான பதில் தந்த திராவிட்!

இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு ராகுல் பதிலளித்தார்.

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. போட்டிகள் ஜூன் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியின் மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தினேஷ் கார்த்திக்கையும் சேர்த்துள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் இந்திய அணியை வீழ்த்த, தென்னாப்பிரிக்க அணி பலமிக்க படையை களமிறக்க உள்ளது. ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட குவின்டன் டி காக், மார்க்கரம், யான்சன், வன் டீர் துஷன், டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால், இந்திய அணிக்கு நிச்சயம் கடும் சவால்களை அளிப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்திய பிட்ச்கள் அனைத்தும் சுழலுக்கு சாதகமாகத்தான் இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சுகளை நம்பியுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவில் திணறுவது வழக்கமான ஒன்றுதான். இதனால், இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous post Ration Card: உங்க ரேஷன் கார்டு இனி செல்லாது – 2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து!
Next post லஞ்ச வழக்கில் விடுதலையான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு!