Ration Card: உங்க ரேஷன் கார்டு இனி செல்லாது – 2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து!

2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது

தமிழகத்தில், சுமார் 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு உள்ளதாக, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 11 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 33 ஆயிரத்து 888 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதே போல் மாவட்டத்தில் 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 131 கடைகளை வரும் ஜூலை மாதத்திற்குள் பகுதி நேர கடைகளாகவும், முழு நேர கடைகளாகவும் பிரிக்க வேண்டும். அதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 240 கடைகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 6,976 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. அதற்கு விரைவில் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சில இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக புகார்கள் வருகின்றன. அதனை கட்டுப்படுத்த அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த புகார் பெட்டியின் சாவி கலெக்டரிடம் மட்டுமே இருக்க வேண்டும். பின்னர் அந்த புகார் மீது அவர் நடவடிக்கை எடுப்பார்.

Previous post ‘சாதனைனா இப்படி இருக்கணும்’…ரிஷப் தரமான ரெக்கார்ட்: பகலிரவு டெஸ்டில் ஷ்ரேயஸ் சரித்திரம்!
Next post ‘இந்திய அணியில்’…ஹார்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா? உறுதியான பதில் தந்த திராவிட்!