
கொரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் – ஐ.சி.எம்.ஆர்
கொரோனா வைரஸின் இரண்டம் அலை இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது. ஆனால் முற்றிலும் தளர்வாக, 2019ஆம் ஆண்டில் நாம் நடமாடியதைப் போல வெளியே சுற்றித் திரிய முடியாது. இப்போதும் கொரோனா நமக்கு மத்தியில் தான் இருக்கிறது.
இப்போது இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தன் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இந்தியாவைத் தாக்கலாம் என அது கூறியுள்ளது.
இதில் ஒரே ஒறு ஆறுதல் என்னவென்றால், இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்காது எனக் கூறியுள்ளது ஐ.சி.எம்.ஆர். “ஒவ்வொரு மாநிலமும் தங்களது கொரோனா பாதிப்பு குறித்து தங்களிடம் இருக்கும் தரவுகளை ஆராய்ந்து, மாநிலம் கொரோனாவின் எந்த நிலையில் இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்கவில்லை எனில், கொரோனாவின் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள்” என ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
More Stories
இத்தாலி: பதினாறாம் பெனடிக்ட் தனிப்பட்ட செயலாளரின் வெளிப்பாடுகள் பெரும் சத்தத்தை ஏற்படுத்துகின்றன
பதினாறாம் பெனடிக்ட்டின் தனிச் செயலாளரான மான்சிக்னார் ஜார்ஜ் கான்ஸ்வீன், வத்திக்கானில் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி வரும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். ஜனவரி 13 வெள்ளியன்று 8 மணி செய்திகளுக்காக...
hair growth : முடி கொட்றது நின்னு.. வளர ஆரம்பிக்க இந்த 4 இயற்கை பொருள் போதும். இப்படிதான் யூஸ் பண்ணனும்!
கூந்தல் மெலிந்து சிக்குபடிந்து இருந்தால் அதை நீங்கள் வெறுக்க செய்யாதீர்கள். சற்று கவனம் எடுத்தால் கூந்தல் இழந்த ஆரோக்கியத்தை கூந்தல் மெலிந்து இருக்க பல காரணங்கள் இருக்கலாம்....
Ration Card: உங்க ரேஷன் கார்டு இனி செல்லாது – 2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து!
2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது (மேலும்…)
மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: இறப்புகளை 95% குறைத்து சாதித்த பிரேசில் நகரம் – sigappanada.com
பிரேசிலிலுள்ள நகரம் ஒன்றில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அங்கு பெருந்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு 95 சதவீதம் குறைந்துள்ளது. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த...
`கொரோனா துயரத்தில் உங்களுக்கு மாளிகை அவசியமா?’ – பிரதமரை சாடிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்
கொரோனா பேரிடரை இந்திய அரசு எதிர்கொள்ளும்விதம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். `முன்கூட்டியே திட்டமிடல் என்பதை உங்களிடம் பார்க்க முடியவில்லை' எனவும்...
ராஜேந்திர சோழன் அரண்மனை கண்டுபிடிப்பா? கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம் என்ன?
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ராஜேந்திர சோழனின் அரண்மனையின் ஒரு பகுதி என...