ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டிஷ் படைகள் முழுமையாக வெளியேறின – தூதர் நாடு திரும்பினார் – sigappanada.com
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறின. ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் போய்ச் சேர்ந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம் எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை கிளம்பியது. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சுமார் 15 ஆயிரம் பேரை ஆப்கனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றியுள்ளது.
பிற நேசநாட்டுப் படையினரும் பாதுகாப்பாக வெளியேறும் வரை படை விலக்கல் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது என்று சொல்வதற்குப் பதற்றமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரிட்டன் வெளியேற்ற நடவடிக்கையை முன்னின்று நடத்திய வைஸ் அட்மிரல் சர் பென் கே.
இது ஒரு மிகப்பெரிய சர்வதேச நடவடிக்கை என்றும் ஆனால், நமக்கு இது கொண்டாடுவதற்கான தருணம் அல்ல என்றும் அவர் கூறியிருந்தார். விட்டுவிட்டு வர நேர்ந்தவர்களை நினைத்து சோகம் மேலிடுவதாகவும் அவர் கூறினார். பிரிட்டன் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பியது, நம்முடைய வாழ்நாளில் பார்த்திராத வகையிலான ஒரு நடவடிக்கையின் நிறைவு என்று கூறினார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய சூழ்நிலையில் வெளியேற விரும்பியவர்களுக்கான ஏற்பாடுகளை செய்தவரான பிரிட்டன் தூதுவர் லௌரி பிரிஸ்டோ கிளம்பிய விமானம் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் வந்து சேர்ந்தது.
More Stories
மலேசியப் பொருளியல் வளர்ச்சியில் மூன்று முக்கிய முக்கிய பங்குகள்
மலேசியப் பொருளியல், சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.9 விழுக்காடும் மூன்றாம் காலாண்டில் 3.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. இதற்குப் பல முக்கியக் காரணங்கள் இருப்பதாக மலேசிய...
டெக்சாஸ்: வறட்சியால் அழிந்துபோன பருத்தி வயல்கள்
அமெரிக்காவில், பல தென் மாநிலங்களிலும் வறட்சி தாக்கியது. இது பருத்தி வயல்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்களுக்கு பெயர் பெற்ற மாநிலம். பிரான்சை விட...
இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் பெஞ்சமின் நேதன்யாகு – தேர்தலில் அபார வெற்றி!
இஸ்ரேல் பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்க உள்ளார் இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அந்நாட்டின் அடுத்த பிரதமராக, மீண்டும்,...
லஞ்ச வழக்கில் விடுதலையான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு!
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக உதவிப் பொறியாளர்களாக பணியாற்றிய...
அதிகாரத்தை பெற ஒன்றிணைந்து செயல்பட வலியுறுத்திய இந்திய வெளிவிவகார செயலாளர்
இலங்கை மத்திய அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து சிறுபான்மை சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்....
வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை: இலங்கையில் திட்டம்
இலங்கையில் வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. (மேலும்…)